
15-வது பொதுத் தேர்தலில், சுயேட்சை வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதை ஊக்குவிக்கும் GERAK Independent அமைப்பு, அதன் முதல்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. Maju எனப்படும் நீதிக்காவும் ஒற்றுமைக்காகவும் போராடும் Malaysian Action for Justice and Unity Foundation அமைப்பின் தலைமையில் அரசாங்க சார்பற்ற அமைப்புகளை ஒன்றிணைத்துள்ளது இந்த GERAK அமைப்பு. Maju அமைப்பு முதல் கட்டமாக அறிவித்துள்ள 6 வேட்பாளர்களில் மனித உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞரான Siti Kassim-மும் அடங்குவார். அவர் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச பத்து தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்தத் தொகுதியின் தற்போதைய மக்கள் பிரதிநிதி, பிகேஆரின் பிரபாகரன்.
