
ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் உறுப்புக் கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவுற்றதாக அந்த கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார். 56 தொகுதிகளுக்கான பங்கீடு வெற்றிகரமாக முடிந்ததாகக் கூறிய அவர், வழக்கமான நடைமுறையின்படி வேட்பாளர்களின் பட்டியல் ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் திவால் துறையின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் அடுத்துவரும் சில நாட்களில் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் எனவும் பெர்சத்து கட்சியின் தலைவருமான அவர் தெரிவித்துள்ளார்.
