
நாட்டில் ஒருதலைபட்ச மதமாற்றம் தொடர்ந்தால், அது இஸ்லாத்தின்மீது எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தும் என்று சமய விவகார முன்னாள் அமைச்சர் முஜாஹிட் யூசுப் ராவா எச்சரித்துள்ளார். குடும்பச் சட்டத்தில் அவசரச் சீர்திருத்தத்தை அரசாங்கம் உடனே மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், லோ சியூ ஹொங்-கின் மூன்று குழந்தைகள், தாயின் அனுமதியின்றி முஸ்லிமாக மதமாற்றப்பட்ட சம்பவம் நாட்டில் தொடரும்; தவிர, இதுபோன்ற சம்பவங்கள் இரக்கத்தையும் தாயின் அன்பையும் சிறுமைப்படுத்துவதாகவும் அமைகிறது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
