
சுகாதார அமைச்சு அனுமதித்தால் செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் தடுப்பூசித் திட்டத்தின்கீழ் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
தற்பொழுது, சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் ஊக்கத் தடுப்பூசியை செலுத்துவதற்கு மட்டுமே தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், சிறார்களுக்கான தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்ள சுகாதார அமைச்சின் அனுமதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று மந்திரி பெசார் மேலும் தெரிவித்துள்ளார்.
