
வயதுக் குறைந்த பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்வதற்கு அனுமதியளிக்கும் காலம் கடந்த மாநில சட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என பினாங்கு மாநில துணை முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி வயதுக்குறைந்த பிள்ளைகளை மதமாற்றம் செய்வதற்கு பெற்றோர் இருவரின் அனுமதியை பெற வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளதால் மதமாற்றம் தொடர்பான மாநிலங்களின் சட்டங்கள் இனியும் பொருத்தமற்றவை; காலம் கடந்தவை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
