
ஸ்ரீகெம்பாங்கான், செர்டாங் பெர்டானாவில் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பொறாமையே காரணமென போலீஸ் சந்தேகிக்கிறது.
அந்தச் சம்பவம் தொடர்பில், 33 வயதுடைய அப்பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டிருப்பதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் எ.எ. அன்பழகன் தெரிவித்தார். கனரக வாகன ஓட்டுநரான அந்த ஆடவன் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தானாகவே சரணடைந்ததாக அவர் கூறினார்.
வீடு மற்றும் அலுவலக தளவாடப் பொருட்களை விற்கும் கடையின் உரிமையாளரான 29 வயது பெண், அவரது கடையிலேயே ரத்த வெள்ளத்தில் காணப்பட்டார்.
