
கோவிட் -19 நோய் அன்றாடத் தொற்று 28,825 ஆக உயர்ந்துள்ளது; ஆனால் அதிதீவிரத் தாக்கம் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அறிகுறிகள் இல்லாத அல்லது சிறிய அறிகுறியுடன் முதலாம், இரண்டாம் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் 28,730 பேர் அல்லது 99.67 விழுக்காட்டினர் என்றும் 95 பேர் அல்லது 0.33 விழுக்காட்டினர் மட்டுமே அதிதீவிர தாக்கம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியவர்கள் என்றும் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்
