
வரும் மார்ச் 12-ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் வாக்காளர்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் மக்கள் கவலைப்பட தேவையில்லை. அத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது எஸ்.ஓ.பி- விதிமுறையில் அதிகமான தளர்வுகள் அனுமதிக்கப்பட்டாலும் கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவலை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியும் என்று தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலை நடத்துவதில், அமலாக்கத் தரப்பினர், எஸ்.ஓ.பி மற்றும் புதிய இயல்பு நடைமுறையைக் கடைப்பிடிக்கவிருப்பதால் அத்தேர்தல் கட்டுப்பாடுகளுடன் சீராக இயங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
