
ஜோகூர் தேர்தலில் மூடா கட்சி நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையைப் பின்பற்றுவதுடன் இரு கட்சிகளுக்கு இடையேயான சிக்கல்களை சுமூகமாக தீர்க்க முன்வந்தால், முடா வெற்றிபெற துணைநிற்க பிகேஆர் தயாராக உள்ளது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பிகேஆர் சொந்த சின்னத்தில் போட்டி இட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு முழு மனதுடன் துணை நிற்கும்; இது, மூடா கட்சிக்கும் பொருந்தும்.
நம்பிக்கைக் கூட்டணிக் கட்சிகளிடையே கூட்டு மனப்பான்மை வேண்டும்; இல்லாவிடில், மற்ற தரப்பினர் நம்மை எளிதில் கையாள அது வாய்ப்பாக அமைந்துவிடும் என்று ஜோகூரில் பிகேஆர் தேர்தல் இயந்திரத்தை முடுக்கிவிட்ட நிகழ்ச்சியில் அன்வார் மேலும் குறிப்பிட்டார்.
