
போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்த ஒருவரின் கைம்பெண் மனைவிக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இழப்பீட்டு உரிமை இல்லை என்று நீதிமன்றம் இன்று திர்ப்பளித்துள்ளது. நெகிரி செம்பிலான் தம்பினைச் சேர்ந்த ஆர். காளியம்மாள், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காவல் துறையின் கட்டுக்காவலின்போது இறந்த தன் கணவனுக்காக இழப்பிடு கேட்டு இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பில் நீதித் துறை ஆணையர் John Lee அளித்த வாய்மொழித் தீர்ப்பில், கூட்டரசு அரசியல் சாசனப்படி இத்தகைய இழப்பீட்டிற்கு இடமில்லை என்று தெரிவித்தார். காளியம்மாள் சார்பில் டி.மனோகரன் வழக்காடினார்.
