
நாட்டை பழையபடி சீரான பாதைக்கு கொண்டு செல்வதும் தேசிய முன்னணியின் வெட்கம்கெட்ட கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரவும் ஜோகூரில் நடைபெறவுள்ள வாக்களிப்பு மூலம் பெஜுவாங் கட்சி முயற்சிக்கும் என்று அதன் தலைவர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். கட்சியின் மற்ற அபிலாஷைகளுடன் நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வருதல், ஊழலுக்கு எதிரான போராட்டம், வெட்கம்கெட்ட கலாச்சாரத்தை மட்டுப்படுத்துவது ஆகிய மூன்றையும் ஜோகூர் மாநிலத் தேர்தல் மூலம் பெஜுவாங் முன்னெடுக்கும் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
