
பிள்ளைகள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்திருப்பதற்கு ஆதாரம் இருந்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தாம் பதிவிட்டிருந்த ஆங்கிலக் கட்டுரை தேசிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் எப்படி இன துவேசத்தை தூண்டியிருக்கும் என்பது தமக்குத் தெரியவில்லையென பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.ராமசாமி கூறியுள்ளார்.
எப்படியிருநதாலும் விசாரணை நடத்தும் உரிமை காவல்துறைக்கு உள்ளது. நான் எதனையும் மூடி மறைக்க வேண்டியதில்லை. அதேவேளை, பெர்லீஸ் சமயத் துறையைச் சேர்ந்த அதிகாரியும் மேலும் சிலரும் தன்மீதும் சகாக்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறியுள்ளனர் என்றும் இராமசாமி தெரிவித்துள்ளார்.
