
சபாவைத் தளாமாகக் கொண்ட வாரிசான் கட்சி, தீபகற்ப மலேசியாவில் கால் பதிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ள வேளையில், ஜோகூர் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிடும் கன்னி முயற்சியில் இறங்கி உள்ளது.
எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை சிதைக்கும் துன் மகாதீரின் வேலையை, இவர் மறைமுகமாக செய்வதாக அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளதை மெய்ப்பிக்கும் வகையில் வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால், Pekan Nanas, Bekok, Mahkota, Johor Jaya, Bukit Batu, Permas ஆகிய 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.



