
இந்தோனேசியா, வங்காள தேசம், இந்தியா, மியன்மார் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சு நடத்தி புரிந்துணர்வு உடன்பாடு எட்டப்பட்டு வருவதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார். 2003 ஆம் ஆண்டில் சீனாவுடன் முதலாவது புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. இன்றுவரை 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு வெற்றிகரமாக கையெழுத்திடப்பட்டுள்ளதையும் சரவணன் தெரிவித்தார். இந்தோனேசிய பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவது குறித்த சிக்கலுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



