
நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களுக்கு கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருப்பதால் டோல் கட்டண வசூலிப்பை அரசாங்கம் ரத்துச் செய்ய வாய்ப்பில்லை என பொதுப்பணி அமைச்சர் Fadillah Yusof கூறினார். இதன் தொடர்பில், அரசாங்கம் ஏற்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதால், 14 ஆவது பொதுத் தேர்தலின்போது டோல் கட்டணம் அகற்றப்படும் என நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லையென்பதையும் அவர் மக்களையில் சுட்டிக்காட்டினார்.



