
தனித்து வாழும் தாய் Loh Siew Hong-கின் வயதுக் குறைந்த மூன்று பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்ட விவகாரத்தில் இனத் துவேச பாணியிலான அறிக்கை வெளியிட்ட பெர்லீஸ் முப்தி Asri Zainul Abidin மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையில், Azri zainul Abidin-தான் இந்த விவகாரத்தில் இன மற்றும் சமய உணர்வை தூண்டும் அறிக்கையை வெளியிட்டார் என்றும் இந்த விவகாரத்தில் Azri திசைதிரும்புகிறார் எனவும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது ராமசாமி தெரிவித்தார்.
