
தலைநகரம் Wangsa Maju பகுதியில் 9 இணைய சூதாட்ட மையங்களின் மின் விநியோகத்தை அதிகாரிகள் தடை செய்துள்ளனர். அந்த சூதாட்ட மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக wangsa Maju போலீஸ் தலைவர் Ashari Abu Samah தெரிவித்தார். போலீஸ் மற்றும் Tenaga Nasional கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட இணைய சூதாட்ட மையங்களுக்கு எதிரான மின் விநியோகத்தை தடைசெய்ய முடிவெடுக்கப்பட்டததாக அவர் மேலும் கூறினார்.
