
அனைத்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளுக்கும் வரும் 8, செவ்வாய் முதல் எரிபொருள் உபரிக் கட்டணத்தை ‘ஏர் ஆசியா’ மலேசிய நிறுவனம் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. கச்சாய் எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 120 டாலரைத் தாண்டியுள்ளதால், விமான எரிபொருள் விலையைச் சமாளிப்பதற்காக அந்நிறுவனம் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது. மார்ச் 8 முதல், விமான முன்பதிவுகளுக்கு இந்த எரிபொருள் கூடுதல் கட்டணம் பொருந்தும். அனைத்து உள்நாட்டுத் தடங்களுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணம் 10.00 வெள்ளியாகும் அதேநேரத்தில் ஒன்று முதல் இரண்டு மணிநேர பயணத் தடங்களுக்கான கட்டணம் 25வெள்ளி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



