
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோலாலம்பூர் போலீஸ் துணைத்தலைவர் டத்தோ யஹ்யா ஒத்மான் எச்சரித்துள்ளார். 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குரவத்து சட்டத்தின்கீழ் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக வெ.10,000 முதல் 30,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பதை அவர் நினைவுறுத்தினார். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரால் ஏற்படும் விபத்துக்கள் அண்மையக் காலமாக அதிகரித்து வருவதால் அவர்களுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
