
நாட்டில் 1,500 வெள்ளி குறைந்தபட்ச சம்பள முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதோடு பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகளும் மீட்சியடையத் தொடங்கியுள்ளன. அதனால், குறைந்தபட்ச சம்பள முறைக்கான அமலாக்கம் விரைவுபடுத்தப்படுமென மக்களவையில் வழங்கிய பதிலில் அமைச்சர் கூறினார்.
முன்னாள் அமைச்சர்களான மு.குலசேகரனும் சைட் சாடிக் அப்துப் ரஹ்மானும் இதன் தொடர்பில் கேள்வி எழுப்பி இருந்தனர்.
