32.2 C
Kuala Lumpur
Saturday, May 18, 2024

Vetri

கரிகாற்சோழன் இலக்கிய விருது:
கனடா, மியன்மார் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது

சிங்கை முஸ்தஃபா தமிழ் அறக்கட்டளை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் இலக்கியவாணர்களுக்கு வழங்கும் கரிகாற்சொழன் விருது, கனடா, மியன்மார்வாழ் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் நீட்டிக்கப்படுவதாக எம்.ஏ. முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் கரிகால் சோழன் விருதை முதலில் பெற்றவர் மலேசிய இலக்கிய படைப்பாளி ப.சந்திரகாந்தம்.

மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு, தமிழீழ எழுத்தாளர்களுக்கு இந்த விருதுடன் பண முடிப்பும் அளிக்கப்படும் நிலையில், இனி இந்த விருது கனடா, மியன்மார்வாழ் தமிழ்வாணர்களுக்கும் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள முஸ்தஃபா, இதன் தொடர்பில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவருடன் ஆலோசித்து இசைவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles