
அண்மைக் காலமாக பழங்களின் விலை யானை விலை, குதிரை விலை என்ற அளவுக்கு விற்பனை செய்யப்படுவதாக வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மலேசியா ஆண்டுதோறும் வெ.90 பில்லியன் மதிப்பில் பழங்களை இறக்குமதி செய்தபோதிலும் கடந்த ஒரு வாரமாக உள்நாட்டில் பழங்களின் விலை அதிகமாக உள்ளதை உள்நாடு வாணிப-பயனீட்டாளர் நலத் துறையும் பயனீட்டாளர் சங்கமும் ஏன் கவனத்தில் கொள்ள வில்லை என்று சமூக ஆர்வலர் ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.
