
மக்களவையில், ஒற்றுமை அமைச்சர் Datuk Halimah Sadique-உடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமாரை அவையிலிருந்து வெளியேறும்படி அவைத் தலைவர் Tan Sri Azhar Azizan Harun உத்தரவிட்டார்.
அமைச்சர் ஹலிமா பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்டு அவரிடம் கேள்விகளை எழுப்பியதற்காக, பத்து நிமிடம் அவையிலிருந்து வெளியேறி காற்று வாங்கி வரும்படி அவைத் தலைவர் சற்று குரலை உயர்த்தி கூறினார்.



