
4ஆவது முறையாக அரசாங்கம் கவிழாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் Asyraf wajdi Dusuki வினவினார். இதனை கருத்திற்கொண்டு விரைவில் 15-ஆவது பொதுத் தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்திற்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின் அரசாங்கத்தில் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டன. நாட்டின அரசியல் நிலைத்தன்மை சீரழிந்துவிட்டது. பொருளாதார வளர்ச்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையை பெறுவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்றெல்லாம் கூறும் Asyraf wajdi, இவை அனைத்தையும் செய்தது அம்னோதான் என்பதை மட்டும் மறைத்துக் கொண்டார்
