
அம்னோ பொதுப் பேரவை நடந்தது முதலே, நாடு முழுவதும் உள்ள அம்னோ கட்சியினர் 15-ஆவது பொதுத் தேர்தல் மனநிலையிலும் பூரிப்பிலும் திளைத்து உள்ளனர்.
தீயணைப்பு வீரர் அடிப் குடும்பத்திற்கு நிதி உதவியாக அரசாங்க பணம் 15 இலட்சத்தைக் கொடுத்துவிட்டு, மலாய்க்காரர் நலனை அம்னோ விட்டுக்கொடுக்காது என்று பிரதமர் பேசியதன் தாக்கம் தணிவதற்குள் இப்போது, மகப்பேறு கால விடுமுறையை 90 நாட்களில் இருந்து 98 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, அவசர அவசரமாக 1955 வேலைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை எப்போது கலைப்பது என்பதை உறுதிசெய்து கொண்டு மாமன்னரை சந்திக்க வேண்டியதுதான் மிச்சம்.
