
கிள்ளான், தாமான் பண்டமாரான் பெர்மாய் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முனீஸ்வரர் மதுரைவீரன் ஆலயம், அரசாங்க நிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதால் அதை உடைப்பதற்காக சம்பந்தப்பட்ட அமலாக்க அதிகாரிகள் முயன்றபொழுது, ஆலயத் தரப்பினர் மந்திரி பெசார் அலுவல உதவியை நாடினர்.
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அலுவலக பரிந்துரையின்படி சிறப்பு ஆலோசகர் டாக்டர் ஜி.குணராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆலயம் உடைபடுவதிலிருந்து காப்பாற்றினார்.

இரண்டு வார காலத்தில் அந்த ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது என உடன்பாடு காணப்பட்டாலும் சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் இடம்பெற்றிருக்கும் இந்தியப் பிரதிநிதி இந்த ஆலய சிக்கலைத் தீர்ப்பதற்கான முயற்சியைத் தட்டிக் கழிப்பதுதான், இந்த நிலைக்கு காரணம் என்று ஆலயத் தரப்பில் சொல்லப்படுகிறது.

