
விரைவில் நடைபெற இருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக பிகேஆர் பொதுச் செயலாளர் Saifuddin Nasution Ismail இன்று கிளந்தானில் கட்சி ஆதரவாளர்களிடையே அறிவித்துள்ளார்.
கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு ரஃபிஸி ரம்லி போட்டியிட இருப்பதாக முன்னமே அறிவித்துள்ள நிலையில், இப்பொழுது கூலிம் பண்டார் பாரு எம்பி-யுமான Nasution Ismail-உம் களத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளது கட்சி உறுப்பினர்களின் புருவங்களை உயர்த்தி உள்ளது.
இருவருமே சிறந்த வேட்பாளர்கள் என்பதால், போட்டி கடுமையாக இருக்கும் என்பது திண்ணம். ஆனால், இது கட்சியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரின் நிலை என்ன என்பதும் போகபோகத் தெரியும்.
