25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

சயாம் மரண ரயில்: ஜப்பானிய அரசு இழப்பீடு தரவில்லையா? -மகாதீரின் பேச்சை நம்புவதற்கு இடமில்லை

இரண்டாம் உலகப் போரின்போது, சயாம் மரண ரயில் திட்டம் என அழைக்கப்படும் பர்மா-சயாம் எல்லைப் பகுதியில் ரயில் தண்டவாளத்தை நிர்மாணிப்பதற்காக ஜப்பானியர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களில் பல்லாயிரக் கணக்கில் மடிந்தனர். அவர்களுக்காக, ஜப்பானிய அரசாங்கம் வெ. 20,700 கோடி இழப்பீடு தந்ததாகக் கூறப்படுவதை துன் மகாதீர் முகமது மறுத்துள்ளார்.

மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமையே போலீசை வைத்து அடித்து சாய்த்த மகாதீர், டாக்கா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “அன்வார் சொந்தமாக தானே முகத்தில் குத்திக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்” என மனமறிந்து பொய் சொன்னவர் இதே மகாதீர்.

இலட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்வை இழந்து, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் உயிர்-உடல் சேதத்திற்கு ஆளானதற்காக ஜப்பானிய அரசு நட்டஈடு வழங்கவில்லை என்று இப்போது சொல்லும் மகாதீரின் பேச்சை நம்புவதற்கு இடமில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles