
மைசெஜாத்ரா செயலியில் உள்ள சில அம்சங்களை நிலைநிறுத்தி, அந்த செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான அவசியம் இருப்பதாக சுகாதார அமைச்சு கருதுகிறது.
இன்று முதல் Endemic காலக்கட்டத்திற்குள் மலேசியா புகுந்தாலும் அந்த செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமென அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.
மக்களின் சுகாதார நிலை குறித்த தரவுகளைப் பதிவு செய்து வைத்திருக்கும் செயலியாக மைசெஜாத்ராவை பயன்படுத்தலாமென மலேசிய மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் அந்த செயலியில் உள்ள ‘Check in’ முறையை அகற்றிவிட்டு, இதர அம்சங்களைத் தொடர்ந்து பயன்படுத்தலாமென மேலவையில் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
