
MySejahtera செயலியை அகற்றும்படி கோரும் தரப்பினருடன் இப்போது எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் இணைந்து கொண்டுள்ளார்.
அந்தச் செயலியின் சேவை தற்போது தேவையில்லாத ஒன்றாகிவிட்டதே இதற்கான காரணமாகும். MySejahtera செயலியின் பாதுகாப்பு விவகாரம் மிகவும் முக்கியம் என்பதால் இது குறித்து சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin விளக்கம் அளிக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தடுப்பூசிக்கான சான்றிதழ்களை தவிர்த்து இனிமேல் MySejahtera தேவையில்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் அதில் உள்ள தனிப்பட்டவர்களின் தரவுகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
