
நாட்டில், ஆள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக, மலேசிய அரச போலீஸ் படை 2021-ஆம் ஆண்டில், மொத்தம் 112 சோதனைகளை மேற்கொண்டது.
அதற்கு முந்தைய ஆண்டான 2020-இல், இது 146-ஆக இருந்தது. எண்ணிக்கை குறைந்திருந்தாலும், பாலியல் வன்முறை மற்றும் கட்டாய தொழிலாளர் குற்றங்கள் இன்னமும் முதன்மை நிலையில் உள்ளன.
கடந்த ஆண்டு, குழந்தைகள் விற்பனை தொடர்பாக மொத்தம் எட்டு சம்பங்கள் பதிவு செய்யப்பட்டதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி இயக்குநர் ஏ.சி.பி. ஹஸ்ரூல் காமிஸ் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளார்.
