
எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தங்களது இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதண் தொடர்பில் பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ Muhyiddin Yassin, துன் மகாதீர் முகமதுவை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இரு வாரத்திற்கு முன்பு நடைபெற்றதாக பெஜுவாங்கின் தலைவர் Mukhriz Mahathir தெரிவித்தார். ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அந்த சந்திப்பு நடைபெற்றதாக Jerlun நாடாளுமன்ற உறுப்பினருமான Mukhriz விவரித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதே இருவரும் பின்னிருந்து முன்னெடுத்த Sheraton நகர்வுக்குப்பின் இப்போது முன்னாள் பிரதமர்களான இருவரும் முதல் முறையாக சந்தித்துள்ளனர். பெர்சத்துவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பொதுவாகவே பெஜூவாங் ஆதரவாக இல்லையென்று முக்ரிஸ் தெரிவித்தார்.
