
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியால், அதிபருக்கு எதிராக போராட்டம் தீவிரமாக உருவெடுத்த நிலையில், அந்தத் தீவு நாட்டில் அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு முதல் இலங்கையில் முகநூல், கீச்சகம், புலனம், தொலைவரி, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது..
ஆனாலும், இலங்கை அதிபர் கோத்தபாய-விற்கு எதிரான பொதுமக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் வேகமடைந்துள்ளதால், அங்கு இராணுவ ஆட்சி ஏற்படுமா என்ற ஐயத்தை பன்னாட்டு அரசியல் பார்வையாளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
