
ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களின் விலையை உயர்த்தும் போக்கு வேண்டாம் என்று வணிகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பன்னாட்டு எல்லைகளைத் திறந்தபின், வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் வருகையால் பொருளாதாரத் துறை நிச்சயமாக மேம்பாடு அடையும்; இதனால் சந்தையில் சில பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் என்றும் இதை, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டாம் என்று வர்த்தகர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் நல அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
‘ஓப்ஸ் பந்தாவ் 2022-ஐ’ அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அலெக்சாண்டர் நந்தா, ‘பொருள் விலையை அநியாயமாக உயர்த்துவது கடுங்குகற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று மேலும் கூறினார்.



