
நாட்டில் 60 வயதுக்கு வயதிற்குட்பட்ட வர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் இரண்டாவது பதிவு இன்று திறக்கப்படுகிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜொகூர், பினாங்கு, சரவாக் மாநிலத்தில் கூச்சிங், மிரி ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கான பதிவு இன்று மதியம் 12 மணிக்குத் திறக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதில்
வயதானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
