
வேலையிட மன அழுத்தத்தால், நிதானத்தை இழந்ததாகக் கருதப்படும் ஆடவர், நேற்று கெந்திங் மலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பலரது முன்னிலையில் நிர்வாணமாக தோன்றினார்.
அந்த ஆடவர், அந்த சுற்றுலா தலத்திற்கு தனது மனைவி, 2, 5 வயதுடைய தனது இரு பிள்ளைகளுடன் விடுமுறையைக் கழிக்க வந்திருந்ததாக கூறப்படுகிறது
அவ்வேளையில் அந்த சம்பவம் தொடர்பில் பகிரப்பட்டிருக்கும் 15 வினாடி காணொளியில் அந்த ஆடவர், தனது மனைவி , பிள்ளைகளின் முன்னிலையில் ஆடைகளைக் கழற்றி , கீழே உட்கார்ந்து தலை குனிவதைக் காண முடிகிறது.
இதனிடையே, அந்த ஆடவர் கெந்திங் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் , பெந்தோங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக , பெந்தோங் மாவட்ட போலிஸ் தலைவர் Zaiham Mohd. Kahar தெரிவித்தார்.
