
பி.கே.ஆர் துணைத் தலைவர் பதவிக்கு தாமும் உதவித் தலைவர் ரபிஷி ரம்லியும் போட்டியிடுவதால் கட்சியில் பிளவு உண்டாகும் என்று கூறப்படுவதை சைபுடின் நசுத்தியோன் மறுத்தார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பி.கே.ஆர் தேர்தலின்போது ரபிசிக்கும் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்குமிடையே நடைபெற்ற போட்டியில் அப்போது கட்சியில் பிளவு ஏற்பட்டது. அத்தகைய பிளவு மீண்டு ஏற்படாது என பி.கே.ஆர் கட்சியின் தலைமைச் செயலாளருமான சைபுடின் உறுதியளித்தார்.
கட்சிக்கு அஸ்மின் செய்த துரோகத்தைப்போல் நாங்கள் செய்யமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
