
சிரம்பான், Jalan Bukit Zamrud பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது, போலீசார் ஐந்து வயது சிறுமியுடையது என நம்பப்படும் எலும்புக் கூட்டை கண்டனர்.
அந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் Nanda Maarof தெரிவித்தார்.
கடந்த மார்ச் 28 -ஆம் தேதி, Jalan Bukit Zamrud-க்கு அருகில் உள்ள Bukit Putus பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் இருந்து, பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அந்த பெண் கொலை தொடர்பில் நீடிக்கும் விசாரணையில் தற்போது 5 வயது சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்துள்ளனர்
