
நேற்று தொடங்கிய SPM தேர்வுக்கான இரண்டாவது அமர்வின்போது, இதற்கு முன்பு முதல் அமர்வின்போது பயன்படுத்தப்பட்ட, SPM தேர்வுக்கான அதே கேள்வித் தாட்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து மாணவர்களும் பெற்றோரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கோவிட் -19 தொற்று, வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக , பிரத்தியேகமாக இரண்டாவது முறையாக SPM தேர்வு நடத்தப்பட்டது.
அவ்வகையில் நேற்று நடத்தப்பட்ட மலாய் மொழிக்கான வாய்மொழி தேர்வுக்கான கேள்விகள், ஏற்கனவே மாணவர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டிருந்த கேள்விகளாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
