
ஜோகூர், மெர்சிங், தொகோங் சங்கோல் தீவில் கடந்த புதன்கிழமை மூழ்கி காணாமல் போன நெதர்லாந்தைச் சேர்ந்த 14 வயதுடைய முக்குளிப்பவரான நாதென் ரென்ஸ் பலவீனமடைந்தது உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
அச்சிறுவன் மரணமடைந்ததை அவரின் தந்தை அட்ரியன் பீட்டர் செஸ்டெர்ஸ் உறுதிப்படுத்தியதாக மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவு, ஏ.பி.எம்.எம். இயக்குநர் நூரூல் ஹிசாம் சகாரியா தெரிவித்தார்.
கடலில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்ததாக நம்பப்படும் அச்சிறுவனை இந்தோனேசிய நீரிணைப் பகுதியில் தேடுவதற்கு உதவுமாறு, முன்னதாக இந்தோனேசிய அமலாக்கத் தரப்பிடம் ஜோகூர் பாரு கடல்சார் தேடல் மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மையம் கேட்டுக் கொண்டது.
