
சுமார் ஓர் ஆண்டு காலமாக போலீசிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்துவந்த வர்த்தகரான Nicky Liow இறுதியில் சரண் அடைந்தான். தமது வழக்கறிஞர் உடன் வந்த Nicky Liow போலீசிடம் சரண் அடைந்ததாக சைனா பிரஸ் தகவல் வெளியிட்டது. 34 வயதுடைய அவர் திட்டமிட்ட மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் போன்ற குற்றத்தில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்தான் .
கடந்த ஆண்டு மார்ச் மாதம் Nicky Liow கும்பலுடன் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் என நம்பப்படும் 68 நபர்கள் வெவ்வேறு நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து Roll Royce உட்பட 16 ஆடம்பர கார்கள் மற்றும் 70 லட்சம் ரிங்கிட்டிற்கும் கூடுதலான வெளிநாட்டு நாணயங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
