
ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கியில் மாணவர் தங்கு விடுதியின் பெண் மேலாளர் ஒருவர் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். உறைவிடப் பள்ளி யொன்றில் மேலாளராகப் பணியாற்றிவரும் அப்பெண், மாணவர்களுக்கு உணவு விநியோகம் செய்யும் விவகாரத்தில் பணமோசடி செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு வழங்கியதற்கு அப்பெண் மொத்தம் இரண்டு கோடி வெள்ளியை செலவுத்தொகையாக கணக்குக் காட்டியுள்ளார். ஆனால், அதில் ஊழல் நடந்துள்ளதாகக்கூறி அதிகாரிகள் அப்பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
