
அடுத்த மாதம் மே தொடக்கத்தில் இருந்து 1 லட்சத்து 79,451 அந்நிய தொழிலாளர்கள் நாட்டிற்குள் தருவிக்கப்படுவார்கள் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
கட்டுமானம், விவசாயம், தோட்டத் தொழில், சேவை, தயாரிப்பு ஆகிய 5 துறைகளில் வேலை செய்வதற்காக அவர்கள் தருவிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார். கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி வரை, அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக 5 லட்சத்து 19,937 விண்ணப்பங்களை மனிதவள அமைச்சு பெற்றிருப்பதாக அவர் கூறினார்.
