
2022 மார்ச் மாதத்தில் யுக்ரேன் தலைநகர் கீயவில் குண்டுமழை பொழிந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்த வீட்டில் இருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்தார் அனா ஹொரோடெட்ஸ்கா.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த 30 வயதான அனா, மார்ச் 17-இல் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தபோது, ஓராண்டாக அவர் காதல் உறவாடிவந்த 33 வயது வழக்கறிஞர் அனுபவ் பாசின் அனாவை வரவேற்றார்.
விமான நிலையத்திலேயே இசைக் கலைஞர்கள் கொண்டாட்ட இசையை இசைக்க, அனுபவ் தரையில் ஒரு காலில் முட்டி போட்டு, அனாவின் விரலில் மோதிரத்தை அணிவித்ததும், கண்டம் விட்டு கண்டம் தொடர்ந்த இருவரின் காதலும் நிறைவேறியது.
