
உடல் நலப் பாதிப்புள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இரண்டாவது கோவிட் ஊக்கத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படுவர். முதல் ஊக்கத் தடுப்பூசியை போட்டுக் கொண்ட 4-லிருந்து 6 மாத இடைவெளியில் இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி மருந்தாக ஃபைசர் பயன்படுத்தப்படும் என்றும் 12-லிருந்து 17 வயதுக்கு உட்பட்ட பதின்ம வயதினரும் ஊக்கத் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்
