
தேசிய முன்னணியின், குறிப்பாக அம்னோவின் பதவி மோகத்தைத் தீர்க்கும் வகையில் 15ஆவது பொதுத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஏதுவாக, ஜூலை மாதத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற ஆரூடம் புத்ராஜெயாவில் வலுத்து வருகிறது.
ஜூலை மாத இறுதியில் எதிர்க்கட்சியுடனான நல்லிணக்க புரிந்துணர்வு உடன்பாட்டை முடித்துக்கொள்ளும்படி அம்னோ உச்ச மன்றம் வலியுறுத்தி வருவதாலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்தால் நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல் அதிரடியாக இருக்கும் என்பதாலும் இவற்றுக்கெல்லாம் தீர்வு காண தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி அரண்மனையிடம் கோரிக்கை வைக்க கொல்லைப்புற ஆட்சியின் இரண்டாவது அத்தியாய ஆட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.


