
வருகைப்பதிவும் பள்ளி நடைமுறையும் கோவிட்-19க்கு முந்தைய காலத்தைப் போல் இனி தொடருமென்று கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் ராட்ஸி ஜிடின் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் முன்பைப்போல முழு வீச்சுடன் செயல்படுவதை மாநிலக் கல்வித் துறையும் மாவட்டக் கல்வி அலுவலகங்களும் இனி கண்காணித்து உறுதி செய்யும்.
எதிர்காலத்தில் பள்ளிக் கல்வி குறித்த வழிகாட்டுதலை அவ்வப்பொழுது கல்வி அமைச்சகம் வெளியிடும் என்றும் முகமட் ராட்ஸி கூறினார்.
