27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

ரஷ்ய போர்க் கப்பல் முழ்கியது எப்படி?

50 நாட்களுக்கும் மேலாக யுக்ரேனுக்கு எதிராக போர் நடத்திவரும் ரஷ்யப் ராணுவத்தினருக்கு பெரும் பக்க பலமாக இருந்த மோஸ்க்வா என்ற போர்க் கப்பலைத் தாக்கி கருங்கடல் பகுதியில் மூழ்கடித்தது தாங்கள்தான் என்று யுக்ரேன் உலகுக்கு அறிவித்து மூன்று நாட்களுக்குப் பின், ரஷ்யா இப்போது அதை மறுத்து வருகிறது.

அந்த விமானந்தாங்கிக் கப்பல், சேதமடைந்த நிலையில் துறைமுகத்துக்கு இழுத்து வந்தபோது கடல் கொந்தளிப்பாக இருந்த காரணத்தால் அது மூழ்கிவிட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் இப்போது தெரிவித்துள்ளது.

ரஷ்ய ராணுவ பலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த இந்தக் கப்பல் 500-க்கும் மேற்பட்ட படையினருடன் யுக்ரேனுக்கு எதிராக செயல்பட்டு வந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles