
தேசிய சட்டத்துறை முன்னாள் தலைவர் Tommy Thomas தமது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்த சிறப்பு பணிக்குழுவின் விசாரணையின் முடிவு ஜூன் மாத இறுதியில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று சட்ட அமைச்சர் Wan Junaidi Tuanku Jaafar தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 முதல் நிகழும் ஏப்ரல் 12ஆம் நாள்வரை 10 ஆலோசனை கூட்டங்களை சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்டது.
சட்டத்துறை அலுவலகம், நீதிதுறை நியமனங்கள் ஆணையம், கூட்டரசு நீதிமன்றத்தின் பதிவதிகாரி, நிதி அமைச்சு, வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் மட்டுமின்றி சில தனிப்பட்ட நபர்களையும் சிறப்பு விசாரணைக் குழு சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக Wan Junaidi விவரித்தார்.
