
Sapura நிறுவனம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்புடன் மல்லுக்கு நிற்கும் Rafizi Ramli, இடையில் அந்த நிறுவனத்தின் அவதூறு வழக்கையும் எதிர்கொள்கிறார்.
Sapura குழுமத் தலைவரும் அதன் தலைமை நிருவாக அதிகாரியுமான Shahril Shamsuddin-க்கு எதிராக அவதூறான வகையில் எழுதப்பட்ட 3 செய்திக் கட்டுரைகளை திரும்பப் பெறுவதுடன் Rafizi Ramli மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில் அந்த நிறுவனத்தில் சார்பில் மேற்கொள்ளப்படும் அவதூறு வழக்கை அதுவும் பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கும் தருணத்தில் Rafizi Ramli எதிர்கொள்கிறார்.
